×

பொம்மிடியில் பரபரப்பு தனியார் நிதி நிறுவனத்தில் 47 லட்சம் கொள்ளை

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடியில், 5 ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் கொடுத்து வசூல் செய்து  வருகின்றனர். இங்கு மேலாளர் விவேக் யாதவ் உள்பட 9 பேர் பணியாற்றி வருகின்றனர்.  நேற்று முன்தினம் மாலை, பயனாளிகளுக்கு கடன் கொடுப்பதற்காக ₹47 லட்சத்தை நிதி நிறுவனத்தின் இரும்பு லாக்கரில் வைத்திருந்தனர். இரவு 9  மணிக்கு பணியை முடித்து விட்டு, மேலாளர் விவேக் யாதவ் மரக்கதவை மட்டும் பூட்டி விட்டு, வெளியே உள்ள இரும்பு கேட்டை பூட்டாமல் சென்று விட்டார். நேற்று காலை 9 மணிக்கு அலுவலகத்தை திறக்க அவர் வந்தபோது மரக்கதவு உடைக்கப்பட்டு, லாக்கருடன் ₹47 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  புகாரின்படி பொம்மிடி போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery , Bump , pomit, Private ,financial, 47 lakh ,robberies
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி...